ஆரணி, நவ. 19: ஆரணி அருகே முள்ளிப்பட்டு சாலையில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பட்டு கூட்டுறவு சங்கங்களின் சாயநீர் சுத்திகரிப்பு அமைப்புக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்களில் வெளியேறும் சாயக் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆரணியில் 2002-2003ஆம் ஆண்டில் ராஷ்ட்ரீய சாம் விகாஸ் போஜனா திட்டத்தின்கீழ் இக்கட்டடம் கட்டப்பட்டது. இதில், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அன்னை அஞ்சுகம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், களம்பூர் ராமர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கொருக்காத்தூர் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியன இதன்மூலம் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டுறவு சங்கங்களின் பட்டு நூல்களை சாயம் போட்டு எடுத்துச் செல்வதற்கு வசதியும் செய்து தரப்பட்டது. இதன் பராமரிப்புப் பணிகளை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கட்டடம் பயன்பாடின்றி பாழாகி வருவதாக நகர மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது,
சாயநீர் சுத்திகரிப்பு அமைப்பு கட்டடம் ஆரணியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால், பட்டு நூல்களை அங்கு சாயம் போட்டு எடுத்து வர சிரமம் ஏற்படுகிறது என்றனர்.
இதுகுறித்து நகர மக்கள் கூறுகையில், சாயநீர் சுத்திகரிப்பு கட்டடத்திலேயே சாயம் போட வேண்டும்.
தற்போது கூட்டுறவு சங்கம் இருக்கும் இடத்திலேயே சாயம் போடுவதால் சாயக்கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பட்டு சாயக்கழிவு நீர் கால்வாய் வழியாக பையூர் ஏரியில் கலக்கிறது.
இதனால் நீர் நச்சுத்தன்மை அடைந்துள்ளது. எனவே, சாயநீர் சுத்திகரிப்பு கட்டடத்தை கூட்டுறவு சங்கங்கள் பயன்படுத்த வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

