மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீஸாா் தணிக்கை செய்த போது, தாமஸ் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் அந்தோணி மகன் வேளாங்கண்ணி அருள்தாஸ் (40), தனது பெட்டிக்கடையில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வேளாங்கண்ணி அருள்தாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









