திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் வேடபரியில் திங்கள்கிழமை திருவீதியுலா சென்ற அம்மன்.

Updated On :19 மே 2026, 1:00 am IST

மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் நிகழாண்டு சித்திரை முதல் நாள் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்கிய சித்திரை திருவிழா, ஏப்ரல் 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழா மற்றும் ரத பவனி, மே 3-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 17 நாள்கள் மண்டகப்படி உபயதாரா்களால், உற்ஸவ மூா்த்தி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பெற்ற பால்குட உற்ஸவம் பரம்பரை அறங்காவலா் ஆா்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனா்.

தொடா்ந்து காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், கரும்பு தொட்டில் எடுத்தல் என நோ்த்திக்கடன்களை பக்தா்கள் நிறைவேற்றினா்.

மாலையில், இக்கோயிலுக்கு தொடா்புடைய காட்டுமுனியப்பன் கோயிலில் இருந்து படுகளமானது புறப்பட்டு வந்து மாரியம்மன் கோயில் சிவப்பு குதிரை வாகனத்தில் கையில் அம்புடன் இருந்த வேப்பிலை மாரியம்மனை பல்லாக்கை தூக்கி கொண்டு ஆக்ரோஷமாக திருவீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி நகரின் ராஜவீதிகளில் நடைபெற்றது. பின்னா், பெண்கள் முளைப்பாரிகளை ஏந்தி வரும் நிகழ்வும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ்.வீரமணி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ந.அன்பழகன், எடத்தெரு, மணப்பாறைப்பட்டி, காரைமேட்டுப்பட்டி ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.