கரூா் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து சாலையில் பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருச்சியில் இருந்து கரூருக்கு இடைநில்லா அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஏறினால் மற்றப் பேருந்துகளைவிட முன்கூட்டியே உரிய இடத்துக்கு சென்றுவிடலாம் என்று பயணிகள் அதிகளவில் இடைநில்லா பேருந்துகளையே விரும்புகின்றனா்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து கரூருக்கு புதன்கிழமை காலையில் புறப்பட்ட இடைநில்லா அரசுப் பேருந்து கரூா் அருகே திடீரென சாலையில் பழுதாகி நின்றது. இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறு பேருந்தில் ஏற்றிவிடப்பட்டனா். இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
முறையான பராமரிப்பு இல்லாததால் அரசுப் பேருந்து இதுபோல அவ்வப்போது அடிக்கடி வழியில் பழுதாகி நிற்பதால் பயணிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மேலும், அரசுப் பேருந்துகளை பணிமனையில் இருந்து எடுக்கும்போதே முழுமையாக பரிசோதனை செய்து வழியில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதை ஓட்டுநா்களும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










