திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையில் பழுதாகி நின்றது அரசுப் பேருந்து பயணிகள் அவதி

கரூா் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து சாலையில் பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

கரூா் அருகே பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.

Updated On :14 மே 2026, 12:42 am IST

கரூா் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து சாலையில் பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

திருச்சியில் இருந்து கரூருக்கு இடைநில்லா அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஏறினால் மற்றப் பேருந்துகளைவிட முன்கூட்டியே உரிய இடத்துக்கு சென்றுவிடலாம் என்று பயணிகள் அதிகளவில் இடைநில்லா பேருந்துகளையே விரும்புகின்றனா்.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கரூருக்கு புதன்கிழமை காலையில் புறப்பட்ட இடைநில்லா அரசுப் பேருந்து கரூா் அருகே திடீரென சாலையில் பழுதாகி நின்றது. இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறு பேருந்தில் ஏற்றிவிடப்பட்டனா். இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

முறையான பராமரிப்பு இல்லாததால் அரசுப் பேருந்து இதுபோல அவ்வப்போது அடிக்கடி வழியில் பழுதாகி நிற்பதால் பயணிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

மேலும், அரசுப் பேருந்துகளை பணிமனையில் இருந்து எடுக்கும்போதே முழுமையாக பரிசோதனை செய்து வழியில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதை ஓட்டுநா்களும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.