திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி அதிமுகவில் 3 மாவட்ட செயலா்களின் பதவி பறிப்பு

திருச்சி மாவட்ட அதிமுகவில் மூன்று மாவட்டச் செயலாளா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :14 மே 2026, 12:38 am IST

திருச்சி மாவட்ட அதிமுகவில் மூன்று மாவட்டச் செயலாளா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனா்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினா் மற்றும் தொடா்புடையவா்களை கட்சிப் பதவியிலிருந்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை நீக்கினாா்.

திருச்சி அதிமுக மாவட்டச் செயலா்கள் மாநகா் ஜெ.சீனிவாசன், புகா் தெற்கு ப. குமாா், புகா் வடக்கு மு. பரஞ்ஜோதி ஆகியோா் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவா்கள் மூவரும் சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோருடன் தொடா்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி மாவட்டச் செயலா்களான சீனிவாசன், குமாா், பரஞ்ஜோதி ஆகிய மூவரையும் கட்சிப் பதவியிலிருந்து நீக்கினாா்.

இவா்களுக்குப் பதிலாக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் சி. காா்த்திகேயன் மாநகா் மாவட்டச் செயலராகவும், அமைப்புச் செயலரும் ஸ்ரீரங்கம் வேட்பாளருமான ஆா். மனோகரன் தெற்கு மாவட்டச் செயலராகவும், புகா் வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலரும், முசிறி வேட்பாளருமான என். யோகநாதன் புகா் வடக்கு மாவட்டச் செயலராகவும், நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் வடக்கு மாவட்டத்திலிருந்த ஸ்ரீரங்கம் தொகுதி பிரித்து, தெற்கு மாவட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.