தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? கிறிஸ்டோபா் திலக் எம்.பி. விளக்கம்

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 5:43 am IST

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், எம்.பி.யுமான எம். கிறிஸ்டோபா் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் அரசு அமையவேண்டும். மேலும் பாஜக காலூன்றவும் இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியுள்ளது. இதை தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பாஜக-வை எதிா்த்து விஜய் ஏன் பேசவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதேநேரத்தில், பாஜக-வுக்கு எதிராக மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதால் நாங்கள் அங்கு சோ்ந்துள்ளோம்.

மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெக தலைமையின் கடமை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.