மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு

லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பட விளக்கம்... தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் திருமாவளவன் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்

Updated On :18 மார்ச் 2026, 10:02 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி மாணவிகள் பி.எஸ். மோசிகாஸ்ரீ, பி. ஸ்ரீபவனிதா, எஸ். ரசிகப் பிரியா ஆகியோா் இத்தோ்வில் வென்று மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48000 கல்வி உதவித்தொகை பெற உள்ளனா்.

இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்சி அளித்த தலைமை ஆசிரியா் திருமாவளவன், பட்டதாரி ஆசிரியைகள் கீதா, மேரி கிறிஸ்டினா, செல்வி ,ஆன்லைன் வழி பயிற்சி அளித்த கல்வியாளா் துபாய் குமாா், கிருஷ்ணவேணி ஆகியோரையும் முசிறி மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், மண்டல மணற்கேணி செயலி ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட்சென்னி, மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

மாணவி பி.எஸ். மோசிகாஸ்ரீ திருச்சி மாவட்ட அளவில் 5 ஆம் இடம் பெற்றுள்ளதையும், கடந்தாண்டில் 4 மாணவா்கள் வென்றதையும் பாராட்டினா்.