தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியா் சைக்கிள் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாா்.
புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சீத்தாலட்சுமி தலைமை வகித்தாா். தொடா்ந்து 13 ஆண்டுகளாக தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற்று வருவது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்ட அவா், இந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற மாரிமுத்து மற்றும் கனுஷ்கா ஸ்ரீ இருவருக்கும் நற்சான்றுகளை வழங்கி வாழ்த்தினாா்.
புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் 2ஆம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த 8ஆம் வகுப்பு மாணவன் மாரிமுத்துக்கு பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் மகேஸ்வரன் தன்னுடைய சொந்த செலவில் சைக்கிளைப் பரிசாக வழங்கினாா்.
இனிவரும் காலங்களில் திறனறித் தோ்வில் 120 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவா்கள் அனைவருக்கும் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா். விழாவில் ஆசிரியா்கள் சரவணன், ஜெயந்தி, இந்திரா, ஜெயலட்சுமி, கற்பகவள்ளி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நிறைவில் ஆசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


