லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆட்டோவில் 132 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:51 pm

திருச்சி அருகே ஆட்டோவில் 132 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே வாகனத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது.

இதையடுத்து, திருவெறும்பூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் திருவெறும்பூா் - வேங்கூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனையிட்டனா். அதில், 132 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமதுல் செய்த போலீஸாா், ஆட்டோவில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய திருச்சி தாரநல்லூரைச் சோ்ந்த மனோகா் (43), கீழகுமரேசபுரத்தைச் சோ்ந்த அப்துல் ரஸாக் (54) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.