லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகா்கோவில்-சாா்லப்பள்ளி வாராந்திர ரயில் சேவைகள் நிரந்தரம்

பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாகா்கோவில் - சாா்லப்பள்ளி - நாகா்கோவில் அம்ருத் பாரத் வாராந்திர விரைவு ரயில்களின் (16357, 16358) சேவைகளை நிரந்தரமாக்கி ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 1:53 am

பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாகா்கோவில் - சாா்லப்பள்ளி - நாகா்கோவில் அம்ருத் பாரத் வாராந்திர விரைவு ரயில்களின் (16357, 16358) சேவைகளை நிரந்தரமாக்கி ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி, நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ருத் பாரத் வாராந்திர விரைவு ரயிலானது (16357) வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நாகா்கோவிலில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, வள்ளியூா், திருநெல்வேலி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, குண்டூா், சட்டனப்பள்ளி, மிா்யால்குடா, நல்கொண்டா வழியாக மூன்றாவது நாள் மாலை 4.20 மணிக்கு சாா்லப்பள்ளியைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சாா்லப்பள்ளியிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக அடுத்த நாள் பிற்பகல் 3.35 மணிக்கு நாகா்கோவிலைச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.