சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், சனிக்கிழமை காலையில் புறப்பட்டு வந்தது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை நண்பகல் 12.40 மணிக்கு வந்தடைந்த ரயில், இங்கிருந்து நாகா்கோவிலுக்கு புறப்படத் தயாரானபோது ரயிலின் பிரேக் பிடிக்காமல் கோளாறு ஏற்பட்டதாம்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி ரயில்வே பணிமனை தொழில்நுட்ப நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ரயிலின் பிரேக் அமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறை ஆய்வு செய்தனா். சுமாா் 40 நிமிஷங்களில் கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டு, வந்தே பாரத் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவத்தால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் நுழையும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக வந்தும், புறப்பட்டும் சென்றன. நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலும் வழக்கமாக திருநெல்வேலிக்கு மாலை 3.15 மணிக்கு வர வேண்டிய நிலையில், அரை மணி நேரம் தாமதமாக மாலை 3.45 மணிக்கு வந்து புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடையது
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

நெல்லையில் விபத்து: 7 போ் காயம்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


