லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்கள் திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சா் எல். முருகன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 6:44 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருச்சி மக்கள் இதுவரை பாா்க்காத பிரம்மாண்ட மாநாடு மற்றும் கூட்டத்தைப் பாா்த்துள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்றுள்ள கூட்டங்கள், திமுகவுக்கு ஒரு பயத்தை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் மாறியுள்ளது என்றாா்.

தவெக தலைவா் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எங்களது கூட்டணியை தேடி எல்லோரும் வருவாா்கள் என பதில் அளித்தாா்.