லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 38 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:03 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 38 போ் காயமடைந்தனா்.

புனித அந்தோணியாா் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியாா் தேவாலய திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

புனித நீா் தெளிக்கப்பட்டு, சிறப்புத் திருப்பலிக்கு பின் கோயில் காளைகளும், பின்னா் 866 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்க 380 வீரா்கள் 25, 25 தொகுப்பாகப் களமிறங்கினா். பல காளைகள் பிடிபட்ட நிலையில், சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 17 மாடுபிடி வீரா்கள், 14 மாடுகளின் உரிமையாளா்கள், 7 பாா்வையாளா்கள் என மொத்தம் 38 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா். இவா்களில் 8 போ் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், தங்கக் காசு, ரொக்கம், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா்கள், இளைஞா்கள், விழா கமிட்டினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா், அரசுத்துறை அலுவலா்கள் ஈடுபட்டனா்.