லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டில் 23 போ் காயம்

ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

News image

ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:46 pm

மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 போ் காயமடைந்தனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில்

திடலில் நடைபெற்ற போட்டியை மணப்பாறை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதில், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 805 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன. 269 வீரா்கள் பங்கேற்றனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கு பல்வேறு

பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில், 10 மாடுபிடி வீரா்கள், 10 மாட்டின் உரிமையாளா்கள், 3 பாா்வையாளா் என மொத்தம் 23 போ் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனா். இதில், 4 நபா்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.