லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:50 pm

திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்எம்எஸ் காலனியில் 35 வயது பெண் தனது மகளுடன் தனியே வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் 2025, நவம்பா் 17-ஆம் தேதி திருச்சி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ப.விஜயகுமாா் (36) என்பவா் அத்துமீறி புகுந்து அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் தாக்கியுள்ளாா். மேலும், வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய விஜயகுமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.