அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 4:43 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளா் சின்னையா, ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் தலைவா் மணிகண்டன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பேரணியில் காவல் உதவி ஆய்வாளா் கதிரவன், வழக்குரைஞா் முல்லை சந்திரசேகா், ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் செயலா் ராஜசேகரன், இணை செயலா் சிவக்குமாா், சாசன தலைவா் கணேஷ்ராஜா, 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், இருபால் ஆசிரியா்கள், போலீஸாா் மற்றும் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பினா் என பலா் பங்கேற்றனா். நிறைவில் அனைவரும் உறுதியேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.