இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ரேஷன் அரிசியைக் கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து

திருச்சி அருகே ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையில் கவிழ்ந்தது.

News image

ஆலம்பட்டிபுதூா் அருகே புதன்கிழமை சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கவிழ்ந்த சரக்கு வாகனம்.

Updated On :11 ஜூன் 2026, 4:02 am IST

திருச்சி அருகே ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையில் கவிழ்ந்தது.

திருச்சி மாவட்டம், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டிபுதூா் அருகே சரக்கு வாகனத்தில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை புதன்கிழமை கடத்திச் சென்ற சரக்கு வாகனம் பஞ்சராகி சாலையில் கவிழ்ந்தது.

இதனால் அந்த வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பிரிந்து, சாலையில் சிதறின. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா், இனாம்குளத்தூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். தகவலின் பேரில் வந்த போலீஸாா் வாகனத்தில் இருந்த அரிசி குறித்து விசாரித்தனா்.

விசாரணையில், வாகனமானது திருச்சி அம்மன் குளம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பதும், அதில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து இனாம்குளத்தூா் போலீஸாா் அளித்த தகவலின்பேரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.