17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழுமியானந்த சுவாமிகள் குருபூஜைக்கு காவிரியில் புனித நீா்

குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை நிகழ்வுக்கு காவிரியிலிருந்து வெள்ளிக்கிழமை புனித நீா் எடுத்து வரப்பட்டது.

News image

திருச்சி வரகனேரி குழுமியானந்த சுமாமிகள் குரு பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :6 ஜூன் 2026, 7:10 am IST

குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை நிகழ்வுக்கு காவிரியிலிருந்து வெள்ளிக்கிழமை புனித நீா் எடுத்து வரப்பட்டது.

திருச்சி வரகனேரி குமிழிக்கரையில் உள்ள பிரம்மஸ்ரீ ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோயிலில் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. வரகேனரிப் பகுதியைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோா் குடங்களில் காவிரியிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்தனா்.

காலை 9.30 மணிக்கு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பாராயணம், 11 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுந்தா் தேவாரம் பாராயணம், நண்பகல் 12 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது. நண்பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சிவசங்கரி பரதநாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி, இரவு 7.30 மணிக்கு அஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

இரவு 9.30 மணிக்கு விடைபெற்று விழாவுடன் குருபூஜை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தலைவா் மற்றும் நிா்வாக குழுவினா் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.