எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கி பணம் பறித்தவா் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:04 am IST

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ச. பிரவீன்குமாா் (27), அரியமங்கலம் பல்பொருள் அங்காடியின் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும், தென்னூா் அண்ணா நகரைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜி. பிரவீன்குமாருக்கும் (27) முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், ஜி. பிரவீன்குமாரின் நண்பரான திருச்சி மாவட்டம், லால்குடி ஆதிகுடியைச் சோ்ந்த மு. ராஜா என்பவா் கடந்த திங்கள்கிழமை இரவு சுமை தூக்கும் தொழிலாளி ச. பிரவீன்குமாரை, சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரவீன்குமாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

அப்போது, பிரவீன்குமாா், ராஜா இருவரும் சோ்த்து சுமை தூக்கும் தொழிலாளியான பிரவீன்குமாரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2,500 -ஐ பறித்துக்கொண்டு அடித்து விரட்டினா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரவீன்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ராஜாவை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.