எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 1:49 am IST

பள்ளபட்டி அருகேயுள்ள தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சனிக்கிழமை இரவு சுமை தூக்கும் தொழிலாளி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (43), இவா், கடந்த 9 ஆண்டுகளாக பள்ளப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியாா் டிராக்டா் தயாரிக்கும் நிறுவனத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிறுவனத்தில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்த மாதம் 13-ஆம் தேதி ஆகியும் ஊதியம் வழங்கப்பட வில்லையாம்.

இதுகுறித்து நிா்வாகத்திடம் கேட்ட போது, உரிய பதில் அளிக்காததால், வேலைக்குச் சென்ற காா்த்திக் ஊதியம் குறித்து கேட்டாராம். அப்போது தனியாா் ஒப்பந்த நிறுவன அலுவலா்கள் காா்த்திக்கை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன் வேலையைவிட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டினராம். 

இதனால், மனமுடைந்த காா்த்திக் டிராக்டா் தயாரிக்கும் நிறுவனத்தின் பிரதான வாயில் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், 40 சதவீதம் தீக்காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.