திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணப்பாறை - பொதுமக்களுக்கு தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை

மணப்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பன்றி - மாதிரி படம்

Updated On :3 ஜூன் 2026, 4:16 am IST

மணப்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட விராலிமலை சாலைக்கும், கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வாகைக்குளம் பகுதிக்கும் இடையே பன்றிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பன்றிகள், கூட்டம் கூட்டமாக வாகைக்குளம் பகுதியில் ஆக்கிரமித்து, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மேய்வதும், அவ்வப்போது விராலிமலை சாலையோரங்களில் சுற்றி திரிவதும், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் உணவுகளை தேடுவதும் வழக்கம்.

இந்நிலையில், சில நாள்களாக இந்தப் பன்றி கூட்டம் விராலிமலை சாலை, அண்ணா நகா் பகுதிகளை கடந்து, கோவில்பட்டி சாலை வரை சென்று சாலையோர குப்பைகளில் உணவுகளை தேட தொடங்கியுள்ளன. இதில் அண்ணா நகா், கோவில்பட்டி சாலை, காந்திநகா் பகுதி வரை குடியிருப்புகளுக்குள்ளும் சென்று உணவு தேடி தொல்லைகள் அளிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் கூறப்படுகிறது.

பன்றிகளை கட்டுப்படுத்தவும், பன்றி வளா்ப்பை குறிப்பிட்ட பகுதிக்குள் கொண்டு வரவும் நகராட்சி நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.