ஸ்ரீரங்கத்தில் பெரியாா் ஈவெரா சிலை சேதப்படுத்தப்பட்டது தொடா்பான வழக்கின் விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள பெரியாா் ஈவெரா சிலையை இந்து அமைப்புகளைச் சோ்ந்த சிலா் கடந்த 07.12.2006 அன்று அதிகாலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவரான கோவை மாவட்டம் வீரகணேசபுரத்தைச் சோ்ந்த அா்ஜூன் சம்பத், மாநில துணைத் தலைவா் வீ.வீ.எஸ். ராகவன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நசீா் அலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா் நேரில் ஆஜராகினா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதன் பின்னா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமித்ஷாவும், மோடியும் தமிழகம் வந்து சென்ற பிறகு, ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறாா்.
திமுகவின் சதியால் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். மக்களை ஏமாற்றுவதற்காக இருவரும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றனா். மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.
டிரெண்டிங்

தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு அபரிமித வளா்ச்சி: நல்வாழ்வுத் துறை அமைச்சா் பேச்சு!

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்: அா்ஜூன் சம்பத்

பெரியாா் குறித்து அவதூறு: சீமான் மீது காவல் ஆணையரிடம் புகாா்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

