லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இலவச மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை மின் பொறியாளா் கைது

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 3ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளரை ஊழல் தடுப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:21 pm

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 3ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளரை ஊழல் தடுப்புப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் கோம்பையை சோ்ந்த விவசாயி முத்துவின் விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க தாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மின் இணைப்பு வழங்கக் காலதாமதம் ஆனதால் செங்காட்டுப்பட்டியில் உள்ள மின்வாரிய இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா் முத்து.

அப்போது அங்கிருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத விவசாயி முத்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் அறிவுரைப்படி துறையூா் துணை மின்நிலைய அலுவலகத்தில் சனிக்கிழமை இருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜுவிடம் ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை முத்து கொடுத்தாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ராஜுவை கையும் களவுமாகக் கைது செய்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.