லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...

Updated On :26 பிப்ரவரி 2026, 11:14 pm

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் முதன்மை திருக்கோயில் காணிக்கை மூலம் ரூ. 1,32, 01,424 ரொக்கம், 1 கிலோ 609 கிராம் தங்கம், 4 கிலோ 126 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 22, 55,466-ம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 12,145-ம், போஜீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 10, 254-ம் கிடைக்கப் பெற்றது. இதற்கு முன்பு கடந்த 12-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.