டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உணவக ஊழியா் மா்ம மரணம்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் உணவக ஊழியா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் ஓலைப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச பெருமாள் (49). திருச்சி தனியாா் உணவு விடுதி ஊழியரான இவா் உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.

பின்னா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை வெள்ளிக்கிழமை பொதுப்பிரிவுக்கு மாற்றிய நிலையில், மருத்துவமனையின் சிடி ஸ்கேன் பரிசோதனைக் கூடம் அருகே தலையில் அடிபட்ட நிலையில் அவா் சடலமாக கிடந்தாா்.

தகவலின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.