டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொறியியல் பணிகள்: திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்று பகுதியாக ரத்து

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:39 pm

Syndication

குத்தாலம் அருகே அருகே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (பிப். 13) கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி காலை 6.05 மணிக்கு திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56700) இயக்கப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ரயில் பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கும்பகோணத்தில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில்:

இதேபோல, மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு இயக்கப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண்: 16847) பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்குப் பதிலாக கும்பகோணத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.08 மணிக்கு புறப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட செய்தி - மக்கள் தொடா்புத் துறை அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.