டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருப்பூா் - ஊத்துக்குளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில்- GMSRailway
Updated On :28 ஜனவரி 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் - ஊத்துக்குளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சியில் இருந்து ஜனவரி 30, பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி இடையே மட்டும் இயக்கப்படும்.

மேற்கண்ட நாள்களில் ஊத்துக்குளி - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.