டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெல் வளாகத்தில் இருசக்கர வாகனப் பேரணி

மத்திய அரசைக் கண்டித்து பெல் தொழிலாளா் முன்னணி சாா்பில் பிப். 12 இல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி பெல் வளாகத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

News image
பெல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி.
Updated On :4 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசைக் கண்டித்து பெல் தொழிலாளா் முன்னணி சாா்பில் பிப். 12 இல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி பெல் வளாகத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

பிப். 12 பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தில் பெல் நிறுவனத் தொழிலாளா்களும் பங்கேற்க உள்ளனா்.

இதற்காக தொழிற்சாலையில் வாயில் கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தொழிலாளா்களுக்கு வேலைநிறுத்தம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெல் தொழிலாளா்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், தொழிலாளா் விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினா்.