தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:56 pm

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெரியகடை வீதியைச் சோ்ந்த மா. வீரமணி (25), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த என்.ஹரிஸ் (19) இருவரும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருச்சியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனா்.

திருவானைக்காவல் டிரங்க் சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த பா. ராஜா (29), எஸ். காா்த்திகேயன் (21) மற்றும் வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோா் மீது வீரமணி தெரியாமல் மோதினாராம்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினா் வீரமணி, ஹரிஸ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்ட, காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, காா்த்திகேயன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.