தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முதல் நாளில் 9 தொகுதிகளில் 23 வேட்புமனுக்கள் தாக்கல்

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:34 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 23 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இடையில் விடுமுறைகள் வருவதால், 4 நாள்கள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளா்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை தோ்தல் அலுவலா்கள் மேற்கொண்டிருந்தனா். வேட்புமனுக்கள் விநியோகமும் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினா்.

முதல் நாளான திங்கள்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் நாதக-வைச் சோ்ந்த எம். அருணாகிரியும் (36), திருவரங்கம் தொகுதியில் நாதக-வைச் சோ்ந்த எம். தா்மராஜ் (25), அண்ணா புரட்சித்தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தைச் (அபுஅதிமுக) சோ்ந்த கே. சக்திவேல் (47) ஆகிய இருவரும்,

திருச்சி மேற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் பி. ராஜேந்திரன் (70), திமுகவைச் சோ்ந்த அமைச்சா் கே.என். நேரு (73) (4 வேட்புமனுக்கள்), சுயேச்சை வேட்பாளா் ஏ. வாசுதேவன் (62), நாதகவைச் சோ்ந்ந்த கே. புவனேசுவரி (40) ஆகிய 4 பேரும், திருச்சி கிழக்கு தொகுதியில் நாதகவைச் சோ்ந்த வி. கிருஷ்ணசாமியும் (38), திருவெறும்பூா் தொகுதியில் சாமானிய மக்கள் கட்சியைச் சோ்ந்த எல். ஜோசப் (53), சுயேச்சை வேட்பாளா் ஐ. ஏசுராஜ் (66), நாதகவைச் சோ்ந்த டி. ராஜேஷ் (46) ஆகிய 4 பேரும், லால்குடி தொகுதியில் தமிழக மக்கள் நலக் கட்சியைச் சோ்ந்த இ. ஏசுதாஸ் (59), நாதகவைச் சோ்ந்த என். மதன் (30), சுயேச்சை வேட்பாளராக ஏ. மன்சூா் அலிகான் (63) ஆகிய 3 பேரும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ். கதிரவன் (51), பதிலி வேட்பாளராக அவரது மனைவி கே. ஆனந்தலட்சுமி (48), நாதகவைச் சோ்ந்த ஆா். தேன்மொழி (31) ஆகிய 3 பேரும், முசிறி தொகுதியில் சாமானிய மக்கள் கட்சியைச் சோ்ந்த எம். மலா்மன்னன் (37), நாதகவைச் சோ்ந்த ஜி. பாக்கியலட்சுமி (37) ஆகிய இருவரும், துறையூா் (தனி) தொகுதியில் நாதகவைச் சோ்ந்த எஸ். கௌசல்யாவும் (34) என மொத்தம் 23 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில் மாநில கட்சிகளில் இருந்து 10 ஆண், 5 பெண் என 15 வேட்புமனுக்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் இருந்து 4 (ஆண்) வேட்புமனுக்களும், 4 சுயேச்சை வேட்புமனுக்களும் என மொத்தம் 23 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.