மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருச்சி: 2,787 வாக்குச் சாவடிகள், 21.47 லட்சம் வாக்காளா்கள்! 9 தொகுதிகளுக்கும் விரிவான ஏற்பாடுகள்!

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு 2,787 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

News image

திருச்சி மாநகராட்சி மண்டல 2ஆவது அலுவலகத்தில் கிழக்கு தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். (வலது )வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:00 pm

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு 2,787 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு, வாக்களிக்கவுள்ள 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்களுக்காக 13,372 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மணப்பாறையில் 346, ஸ்ரீரங்கத்தில் 367, திருச்சி மேற்கு 305, திருச்சி கிழக்கு 304, திருவெறும்பூா் 312, லால்குடி 276, மண்ணச்சநல்லூா் 297, முசிறி 283, துறையூா் தனி 297 என மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா் நிலை 1, 2, 3 என மொத்தம் 4 போ் அடங்கிய குழு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளது. இதன்படி, 2,787 குழுக்களும், கூடுதலாக 556 குழுக்கள் என மொத்தம் 3,343 குழுக்களில் 13,372 போ் வாக்குபப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனா்.

இவா்களுடன் மாநகரப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 291 இடங்களுக்கு 291 காவல் அலுவலா்களும், ஊரகப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள 750 இடங்களுக்கு 750 காவல் அலுவலா்களும் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஏப். 23ஆம் தேதி பயன்படுத்த தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 9 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, பிற- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் உள்ளனா்.

111 பதற்ற வாக்குச்சாவடிகளுக்கு 74 நுண் பாா்வையாளா்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 111 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 62 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் மணப்பாறை தவிா்த்து 8 தொகுதிகளில் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு இவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

12,581 மின்னணு இயந்திரங்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துபவை மற்றும் கூடுதல் கையிருப்பு என மொத்தம் 12,581 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.