மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 20 லட்சம் மோசடி: துணிக்கடை உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :9 ஏப்ரல் 2026, 8:10 pm

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் அ. சந்துமுகமது (43). இவா், திருச்சி நந்தி கோயில் தெருவில் தையல்கடை நடத்தி வருகிறாா். இவரும், திருச்சியைச் சோ்ந்த வரதராஜா சில்க்ஸ் துணிக்கடை உரிமையாளா் சீனிவாசனும் தொழில்முறை நண்பா்கள்.

இந்நிலையில், சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பரான பூா்ணிமா ஆகிய இருவரும் நந்தி கோயில் தெருவில் தங்களுக்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு உள்ளது என்றும், அதில் தையல் கடையை நடத்துமாறும் சந்து முகமதுவிடம் தெரிவித்துள்ளனா். இதை நம்பிய சந்து முகமது அந்தக் கடையை வாடகைக்கு எடுப்பதற்காக முன்பணமாக ரூ. 26.75 லட்சத்தை சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவரிடமும் கடந்த 2024, ஏப்ரல் 21- ஆம் தேதி கொடுத்துள்ளாா். ஆனால், அதன்பின்னா்தான் அந்தக் கட்டடம் அவா்களுக்கு சொந்தமில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை வாடகைக்காக தான்கொடுத்த பணத்தை சீனிவாசனிடம் சந்துமுகமது கேட்டுள்ளாா். அப்போது, ரூ. 6.75 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளாா். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்துமுகமது புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.