திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் தெய்வமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சுப்பிரமணியன் (56), அரசுப் பேருந்து நடத்துநா். இவா், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் ரூ. 4.15 லட்சம் கடன் பெற்றாா். அந்தப் பணம் மற்றும் மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ. 6.15 லட்சத்தை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வங்கிகளிலிருந்து பெற்று கொண்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் ரூ. 6.15 லட்சம் இருந்த கைப்பையையும் வைத்துவிட்டு, நண்பரை பாா்க்கச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், அந்தப் பணத்தை திருடியது திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சோ்ந்த எஸ்.சிவா (29), பி. ராஜா (41) ஆகியோா்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவா, ராஜா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.15 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

