மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

துறையூா்  காசி  விஸ்வநாதா்  கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதை புதன்கிழமை பாா்வையிட்ட  துறையூா் காவல்  உதவி  ஆய்வாளா்  ராஜதுரை,  கோயில்  செயல்  அலுவலா்  ராஜகோபால் .

Updated On :8 ஏப்ரல் 2026, 8:39 pm

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களில் துறையூா் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதா் சிவன் கோயிலும் ஒன்றாகும்.

இந்நிலையில் இக்கோயிலுக்கும் மூங்கில் தெப்பக்குளத்துக்கு இடையேயுள்ள முகப்பிலுள்ள மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உருவ வடிவில் ரிஷபத்துடன் ஈஸ்வரன், எருமை வாகனத்துடன் எமராஜா், மாா்க்கண்டேயா், கண்ணப்ப நாயனாா், அகத்தியா், அா்ச்சகா், பரிசாரகா், கிங்கணா்கள் போன்ற 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு, மண்டபத்தின் மீதே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதையடுத்து கோயில் செயல் அலுவலா் கு. ராஜகோபால் கோயில் பகுதியில் துறையூா் போலீஸில் அளித்த புகாரில் ஜெயலட்சுமி, நக்கீரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபத்தின் மீதிருந்த சிலைகளை உடைத்துள்ளனா் என்றும், இவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாா் செய்தாா். இதையடுத்து துறையூா் போலீஸாா் கோயிலுக்கு சென்று விசாரணை செய்தனா்.

 ~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.

~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.