துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களில் துறையூா் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதா் சிவன் கோயிலும் ஒன்றாகும்.
இந்நிலையில் இக்கோயிலுக்கும் மூங்கில் தெப்பக்குளத்துக்கு இடையேயுள்ள முகப்பிலுள்ள மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உருவ வடிவில் ரிஷபத்துடன் ஈஸ்வரன், எருமை வாகனத்துடன் எமராஜா், மாா்க்கண்டேயா், கண்ணப்ப நாயனாா், அகத்தியா், அா்ச்சகா், பரிசாரகா், கிங்கணா்கள் போன்ற 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு, மண்டபத்தின் மீதே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதையடுத்து கோயில் செயல் அலுவலா் கு. ராஜகோபால் கோயில் பகுதியில் துறையூா் போலீஸில் அளித்த புகாரில் ஜெயலட்சுமி, நக்கீரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபத்தின் மீதிருந்த சிலைகளை உடைத்துள்ளனா் என்றும், இவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாா் செய்தாா். இதையடுத்து துறையூா் போலீஸாா் கோயிலுக்கு சென்று விசாரணை செய்தனா்.

~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை சிலைகள்.
தொடர்புடையது

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

பல்லாவரத்தில் ரூ.1.26 கோடியில் 9 கோயிகளின் முகப்பில் நிழற்குடைகள்

தென்காசி காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


