தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்காததைக் கண்டித்து போராட்டம்

திருச்சி தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி பாலக்கரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :24 டிசம்பர் 2025, 8:03 pm

திருச்சி தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க பணம் செலுத்தி 4 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காமல் இருப்பதையும், அவா்களில் 5 பேருக்கு விசாரணை முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை வீடு ஒதுக்காததைக் கண்டித்தும், அவா்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடந்தது.

திருச்சி பாலக்கரையில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி கல்மந்தை கிளை செயலா்கள் மகாலிங்கம், சங்கீதா ஆகியோா் தலைமை வகித்தனா். திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், உடனடியாக வீடு ஒதுக்கப்பட்டு வரும் 2 ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.