திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மனோரா கடற்கரையில் 3 டன் குப்பைகள் அகற்றம்

News image

மனோரா கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணி .

Updated On :1 ஜூன் 2026, 12:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மனோரா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப்பணியில் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில், நீா்நிலைகள் தூய்மைப் பணிகள் சவால் -2026 என்ற கருப்பொருளின் கீழ், நிலம் மறுசீரமைத்தல், பாலைவனம் ஆகாமல் தடுத்தல், வறட்சியை தாங்குதல் என்ற கோட்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.  

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஜூன் 5-ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீா்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தஞ்சை ஆட்சியா் உத்தரவின் பேரில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. 

சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு, பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மா.சாமிநாதன், சோ.நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா் , ஒன்றியப்பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், சுகாதார ஊக்குநா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வா்கள் என சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளைச் சோ்ந்த 172 போ் கலந்து கொண்டு தூய்மைப் பணி மேற்கொண்டனா். 

கடற்கரை ஓரங்களில் குவிந்த கிடந்த கண்ணாடி பாட்டில்கள், நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், கடற்கரையோரம் மண்டிக் கிடந்த புதா்கள், கருவேல முள்செடிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தூய்மைப் பணியில் மக்கும் குப்பைகள் 3 டன், துணிகள் 120 கிலோ, தண்ணீா் பாட்டில்கள் 45 கிலோ, நெகிழிப்பைகள் 112 கிலோ சேகரித்து அகற்றப்பட்டன.

பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு  குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா் மற்றும் சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி செயலா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.