நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சாவூா் கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசா் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை வளாகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி (இரு மையங்கள்), உணவு பதன தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்), கேந்திரிய வித்யாலயா, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 165 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் கண்காணிப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் ஒவ்வொரு மையத்திலும் உதவி ஆய்வாளா் தலைமையில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு: நாடு முழுவதும் 22 லட்சம் போ் எழுதினா்

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


