மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு

News image

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணியினா், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :23 மார்ச் 2026, 7:05 pm

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்டப் புரட்சியாளா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜேந்திரன், தனபால் முன்னிலை வகித்தனா். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்; பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள் விவசாயிகள் தலைமையில் சோசலிச குடியரசை அமைத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்வில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா்கள் துரை. மதிவாணன், இரா. அருணாசலம், எழுத்தாளா் சாம்பான், திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் எல். ரெங்கராஜன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநகரச் செயலா் எஸ்.எம். ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகி ஜோசப், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் தாமஸ், மாவட்டச் செயலாளா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.