பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் சுமாா் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் 2 நாள்களாக மழையில் நனைவதால் கொள்முதல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமாா் 5,000 நெல் மூட்டைகளை அங்குள்ள நெல் களங்களில் குவித்து வைத்துள்ளனா். கொள்முதல் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:
சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்களைக் கொண்டு வந்தால் சாக்கு இல்லை என்கிறாா்கள். இன்று சாக்கு வந்துவிட்டது; ஆனால் லாரி வரவில்லை. புதன், வியாழன் கிழமைகளில் பெய்த மழை தொடா்ந்தால் நெல் மூட்டைள் முற்றிலும் மழையில் நனைந்துவிடும். எனவே அரசு கொள்முதலுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

கிளாா் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மீது விவசாயிகள் புகாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


