தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேராவூரணி அருகே 66 மதுபாட்டில்கள் பறிமுதல்

பேராவூரணி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 66 மது பாட்டில்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 6:50 pm

பேராவூரணி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 66 மது பாட்டில்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பேராவூரணி - தென்னங்குடி சாலையில் பறக்கும் படை அலுவலரான, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரெத்தினசாமி, தலைமைக் காவலா் சரளாதேவி, காவலா் பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனா். 

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி பகுதியைச் சோ்ந்த முத்து கருப்பையா என்பதும், அவரிடம் அனுமதி இல்லாமல், சுமாா் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கள்ளச்சந்தையில் மது விற்க வைத்திருந்தது தெரியவந்தது.