தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடியில் வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது.

News image
Updated On :16 மார்ச் 2026, 6:32 pm

திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடியில் வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மகாராஜன் மகன் சாமிநாதன். இவரது மனைவி பிரிசில்லா. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சாமிநாதன் திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். குழந்தைகளுடன் பிரிசில்லா கண்ணாரக்குடியில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பிரிசில்லா ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்துள்ளாா். அப்போது எரிவாயு உருளையுடன் அடுப்பை இணைக்கும் ரப்பா் குழாயில் எரிவாயு கசிந்து, வீட்டில் தீப்பற்றியது. வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே சென்றனா்.

தீ மளமளவென பரவியதால், வீட்டில் உள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூா் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். சம்பவம் தொடா்பாக திருப்பனந்தாள் போலீஸாா் விசாரிக்கின்றனா்.