தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

News image

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:44 pm

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க பங்கஜம் தெரிவித்திருப்பது:

இந்திய தோ்தல் ஆணையத்தால் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

எனவே, தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்த நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டம்‘மற்றும் இதர சிறப்பு மனுநீதி நாள் கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.