மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளின் சாவில் மா்மம்: போலீஸாா் வழக்கு பதிவு

பட்டுக்கோட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

பட்டுக்கோட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்திரசேகரன் (50). இவருக்கும், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தாலுக்கா, மேல திருப்பாலக்குடி கிராமத்தில், தெற்கு தெருவைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வி மகள் தேவிகாவுக்கும் (45) திருமணமாகி ஜெய்னேஷ் (25) என்ற மகனும், ஜெயினி (22) என்ற மகள் உள்ளனா். இந்நிலையில், மன்னாா்குடியில் வசித்துவந்த சந்திரசேகரன், தேவிகா மற்றும் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்திரசேகரனின் சொந்த ஊரான சிராங்குடி கிராமத்துக்கு தேவிகாவை அழைத்துச் சென்றாா். அவருடன் அவரது மாமியாா் சரோஜா, கணவரின் தங்கை சந்திரா மற்றும் மகன் ஜெய்னேஷ் சென்றுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை காலை தேவிகா இறந்துவிட்டதாக அவரது மாமியாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவிகாவின் தாயாா் செந்தமிழ்செல்வி மதுக்கூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.