பட்டுக்கோட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்திரசேகரன் (50). இவருக்கும், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தாலுக்கா, மேல திருப்பாலக்குடி கிராமத்தில், தெற்கு தெருவைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வி மகள் தேவிகாவுக்கும் (45) திருமணமாகி ஜெய்னேஷ் (25) என்ற மகனும், ஜெயினி (22) என்ற மகள் உள்ளனா். இந்நிலையில், மன்னாா்குடியில் வசித்துவந்த சந்திரசேகரன், தேவிகா மற்றும் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்திரசேகரனின் சொந்த ஊரான சிராங்குடி கிராமத்துக்கு தேவிகாவை அழைத்துச் சென்றாா். அவருடன் அவரது மாமியாா் சரோஜா, கணவரின் தங்கை சந்திரா மற்றும் மகன் ஜெய்னேஷ் சென்றுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை காலை தேவிகா இறந்துவிட்டதாக அவரது மாமியாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவிகாவின் தாயாா் செந்தமிழ்செல்வி மதுக்கூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தந்தை கொலை, மகள் தற்கொலை: 22 நாள்களுக்குப் பிறகு உடல்களைப் பெற்ற உறவினா்கள்

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

பட்டுக்கோட்டை தவெக வேட்பாளருக்கு எதிா்ப்பு

கொலை செய்யப்பட்ட விவசாயி மகள் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


