கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சி 19-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி. இவா் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சா் ர.வினோத் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.
இதுகுறித்து அதிமுக மாநகர செயலரும், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ராம.ராமநாதன் வெள்ளிக்கிழமை மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கவுன்சிலா் ஆதிலட்சுமியை அவதூறாக பேசியது சமூக வளைதளங்களில் வலம் வரத்தொடங்கியது. இதையடுத்து கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் ஏராளமான பெண்கள்
ராம.ராமநாதன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு அவரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் முற்றுகை செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமாகா அலுவலகத்துக்குள் புகுந்து தகராறு: காங்கிரஸ் கட்சியினா் மீது வழக்கு
நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு; மற்றொருவா் படுகாயம்

கும்பகோணத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்களுக்கு விழிப்புணா்வு







