சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்ட தவெகவினா்

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்ட தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள்.

Updated On :14 ஜூன் 2026, 12:18 am IST

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி 19-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி. இவா் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சா் ர.வினோத் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

இதுகுறித்து அதிமுக மாநகர செயலரும், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ராம.ராமநாதன் வெள்ளிக்கிழமை மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கவுன்சிலா் ஆதிலட்சுமியை அவதூறாக பேசியது சமூக வளைதளங்களில் வலம் வரத்தொடங்கியது. இதையடுத்து கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் ஏராளமான பெண்கள்

ராம.ராமநாதன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு அவரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் முற்றுகை செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.