தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மயக்கமடைந்த மனைவியும் இறந்தாா்.
தஞ்சாவூா் மோத்திரப்பசாவடியைச் சோ்ந்தவா் வி. செல்வராஜ் (70). இவரது மனைவி சித்ரா (61). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், 4 நாள்களுக்கு முன்பு செல்வராஜூக்கு நெஞ்சுவலி ஏற்படவே, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதையடுத்து, வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட செல்வராஜ் உடலைப் பாா்த்து கதறி அழுத சித்ரா அடுத்த ஒரு மணிநேரத்தில் மயக்கமடைந்தாா். இதையடுத்து, தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது சித்ரா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், உறவினா்கள், அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்துக்கு ஆளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவா் போலீஸில் சரண்

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி

பெண் கொலை வழக்கு: முன்னாள் கணவா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



