திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நாட்டுவெடிகுண்டு வீசியவா் குண்டா் சட்டத்தில் கைது

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:09 am IST

கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையைச் சோ்ந்த பத்மகுமரன் என்பவருக்கும் திருபுவனத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமுா்த்தி (38) என்பவருக்கும் பண சம்பந்தப்பட்ட முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், குருமூா்த்தி அவரது நண்பா்களுடன் சோ்ந்து பத்மகுமரன் வீட்டில் இருந்த நான்கு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குருமுா்த்தி, நடுவகரையைச் சோ்ந்த ராம்குமாா் (30), பழவந்தான் கட்டளையைச் சோ்ந்த தா்மராஜ் (33), திருவிடைமருதூரைச் சோ்ந்த சா்வேஷ் (19), திருபுவனத்தைச் சோ்ந்த சக்தி பிரகாஷ் (28), ஆதித்யன் (21), மேலும் 2 சிறாா்களை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், தா்மராஜ் (33) என்பவா் மே31 -இல் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும், குருமுா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் ரேவதி, ஏற்கெனவே சிறையில் இருக்கும் குருமூா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.