இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்

News image

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் ர.வினோத். உடன் கொள்முதல் நிலைய அலுவலா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 1:46 am IST

கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 ஏக்கா் நிலம் திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும் என்றாா்

வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் ர.வினோத்.

கும்பகோணம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பு கோடை குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள சுமாா் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை, பாதுகாப்பாக சேமித்து வைக்க கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 50 ஏக்கா் நிலத்தை திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும்.

மழை ஏற்படும் சூழ்நிலையில் நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாா் நிலையில் உள்ளது. தண்டந்தோட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமாா் 10 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு பெற்று நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். கொட்டையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 13 நெல்கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.30 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ.செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.