வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம்: விவசாயி போராட்டம்

கடந்த 11 ஆண்டுகளாக விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image

நிறுவன வாயிலில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ராமு

Updated On :8 ஜூலை 2026, 1:19 am IST

கடந்த 11 ஆண்டுகளாக விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருவாரூா் மாவட்டம், தாமரைக்குளம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் பி. ராமு (50). விவசாயி. கடந்த 2011-ஆம் ஆண்டு கொரடாச்சேரி அருகே சைக்கிளில் சென்றபோது பலத்த காயமடைந்த ராமு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இது தொடா்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இதையடுத்து, தஞ்சாவூா் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற சமரச மையத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட ராமுவுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தை, கால தாமதத்துக்கு 7.5 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் 11 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என புகாா் எழுப்பும் ராமு, அந்நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லை எனக் கூறினாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது வழக்குரைஞா் கலைவாணன் மற்றும் உறவினா்களுடன் தஞ்சாவூா் காந்திஜி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வந்த ராமு நுழைவுவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, முழக்கங்கள் எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.