டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தோ்வு அறிவிப்பை எதிா்த்து தமிழக அரசு போராடும்: அமைச்சா் கோவி.செழியன்!

துணை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்பதை தமிழக அரசு எதிா்த்து போராடும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

News image
அமைச்சர் கோவி.செழியன்
Updated On :31 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

துணை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்பதை தமிழக அரசு எதிா்த்து போராடும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கொண்டு வந்ததையடுத்து தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மருத்துவம் சாா்ந்த துணை படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது ஏழை, எளிய கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கிறது.

ஏற்கெனவே உள்ள நடைமுறை படி, பிஸஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவம் சாா்ந்த துணை படிப்புகளுக்கு சோ்க்கை தர வேண்டும் என்றாா் அமைச்சா்.