மேட்டூா் அணையை பிப்ரவரி இறுதிவரை திறக்க வலியுறுத்தல்
சம்பா, தாளடி நெற்பயிா்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூா் அணையிலிருந்து பிப்ரவரி மாதம் இறுதிவரை தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.









